அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, June 10, 2012

பொய் புகார் - நீடூர் ஜமாத் நிர்வாகத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி!!



ஜமாத் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் MAP.தாஜ் அவர்களின் மேல் முன்னாள் நிர்வாகிகளால் பொய் புகார் கொடுக்க பட்டுள்ளது! ரகசிய வாக்கெடுப்பிற்கு பெரும் முயற்சி செய்து கொண்டு இருகின்ற  MAP.தாஜ்  அவர்களை பற்றி மிகவும் கீழ்த்தனமாக சென்ற வாரம் நீடூர் நெய்வாசல் பெரிய கடைதெருவில் விமர்சனம் செய்து நோட்டீஸ் ஒட்ட பட்டிருந்தது!இரண்டு தினங்களுக்கு முன்பு தாஜ் அவர்களின் தகப்பனார் முன்னாள் முத்தவல்லி,சிறிய தகப்பனார் அவர்களை பற்றியும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு நோட்டிஸ் கடைதெருவில் ஒட்டி வைக்க பட்டிருந்தது. இதெல்லாம் தாஜ் அவர்களை அவமான படுத்துவதற்காகவும் அவரின் மன உறுதியை குலைப்பதற்காகவும் ஆத்திரமூட்டி பிரச்சனையை கிளப்ப, தேர்தலை சீர்குலைக்க ஆதிக்க சக்திகள் சதி செய்தனர், இருந்தும் தாஜ் அவர்களும் அவர் அணியினரும் மிகவும் அமைதிக்காத்தனர்.அப்படி இருந்தும் தாஜ் அவர்களின் மீது குழப்பம் விளைவிப்பதாகவும் அவதூறு பேசுவதாகவும் பொய்யான புகார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஆதிக்கசக்திகளால் கொடுக்க பட்டுள்ளது!!உண்மை நிலவரம் ஜமாத்தார்களுக்கு தெரியும். சட்டப்படி இந்த பொய் புகாரை எதிர் கொள்வார். அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்களின் ஆதரவைக்கொண்டு சட்டப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்வார்.தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி வெற்றிபெறாது!!அல்லாஹ் உண்மையானவர்களுக்கே வெற்றியை தருவான்!!ஆமீன்!!!(முன்பு இதுபோல் ஒரு  புகார் தாஜ் அவர்களின்மேல் கொடுத்து அமைதி பேச்சிவார்தைக்கு  அழைத்தார்கள்....அதுபோல் தற்போது அமைதி பேச்சிவார்த்தை என்ற பெயரில் தேர்தலை தடுக்க முயற்சியா? அல்லாஹ் அறிவான்!!! அமைதியான முறையில் தேர்தல் நடக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்!! ஆமீன்.

26 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் நவ்ஷத் உங்க வலை தலத்தில் நடுநிலையோடு எழுத வேண்டுகிறேன் . நீங்கள் ஊரின் ஒற்றுமை பற்றி தயவு செய்து சொல்ல வேண்டாம் ஏன் என்றால் உங்களின் நோக்கம் நீங்கள் சொல்லவரும் கருத்தில் நன்றாக புரிகிறது .ஏன் ஒரு சாராரின் வேட்பாளர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்கிறார்களா? ஏன் மற்றமொரு வேட்பாளர்களின் பட்டியல் போடவில்லை அவர்களை உங்களுக்கு பிடிக்காதா? அல்லது உங்க குடும்பத்துக்கு பிடிக்காதா? தயவுசெய்து நீங்கள் சொல்லி ஊர் ஒற்றுமை நாங்கள் தெரிந்து கொள்ள தேவை இல்லை எனவே இனிமேலாவது தனி நபரை பற்றி எழுத வேண்டாம் . உங்களுக்கு M A P தாஜை பற்றி என்ன தெரியும் தாஜை பற்றி தெரிய வேண்டுமா ? கொசு நஜீம் அல்லது மஜீது காலனி சையது இவர்களிடம் கேளுங்கள் புட்டு புட்டு வைப்பார்கள் M A P தாஜி எவ்வளவு பணம் கொசு நஜிமை ஏமாற்றினான் என்பது தெரியும் எவன் வந்து ஊர் முத்தவல்லி யா இருக்க போரான? நீடுரின் தலையெழுத்து இது தான் என்றால் யார் மாற்ற முடியும்
    அக்பர்

    ReplyDelete
  2. நாம் யாரையும் தனி புகழ் பாடவில்லை, முன்பு நாம் இரு வேட்பாளர் பெயரையும் வெளியிட்டிருக்கிறோம், இப்பொழுது இந்த வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியிடும் காரணத்தையும் கட்டுரையிலையே வெளியிட்டிருக்கிறோம். நிர்வாகத்தினர் ஜமாத் தேர்வு செய்த வேட்பாளர்கள் என்று தமக்கு வேண்டியவர்களை பெயரை மட்டும் போட்டு வெளியிட்டார்களே? அந்த அநியாயத்தை நீங்கள் அவர்களிடம் தட்டி கேட்டீர்களா? ஜமாத் தேர்வு செய்த வேட்பாளர்கள் என்றால், போட்டியிடும் மற்றவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களும் நம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் தானே? ஜமாத்தார்கள் தான் முடிவு செய்ய வேண்டும் யார் ஜமாத்தாரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்று. அது போக இவ்விரு அணியினரையும் ஒப்பிடுகையில் ஜாமத்தினருக்கு தெரியும் எந்த அணியில் அநியாயம், அக்கிரமம் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள் என்று. தாஜ் தவறு செய்தார் என்று வைத்து கொள்வோம், அவரின் தகப்பானரை பற்றி அவதூறு நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறார்களே அது நியாயமா? கேள்விகள் அனைத்தும் அவர்களை பார்த்து கேட்ட வேண்டும் நம்மிடமல்ல!!! அவர்களை பார்த்து இக்கேள்விகளை கேட்பீர்களா அன்பரே????????

    ReplyDelete
  3. anavasiyamaha avathooru seiyum ivarhal naangal mosmanavarhal endru niroobikkirarhal. mariyaathaikkuriya periyavarkalai patri pesa ivarhalaukku enn thahuthi irukkirathu. eena pravihal.

    mohd.

    ReplyDelete
  4. ivar emaatrivittar endru pulambuhirare, 12 varushamaha oorai ematri kondirukirarkale, theriyavillaiya nanbarukku.

    ReplyDelete
  5. SAGOTAHRAR AKBAR PONDRA NABARGAL ELLAM IVVALAVU NAALAGA ENGE PONARGAL ENDRU THAAN TERIYAVILLAI MUDALIL IRU TARAPPAIYUM VELIYITTADAI PARKKAVILLAI POLUM IVARIN UNARCHI KADANTHA 4/12 AANDUGALAGA MUDANGI KADANTHATHA ENBATHU ENAKKU SANDEGAMA IRUKKIRATHU IVAR THANIMANITHANAI VIMARCHNAM SEIVATHU ARIVUKKU EATTRATHALLA KADANTHA 10+4/12 AANDIN SADANAYAI IVAR PATTIYALIDA MUDIYUMA VIMARCHNAM SEIYA AARAMBITTAL IPPOLUTHU IRUPPAVARGALIL ORUVAN KOODA THAPPA MATTAN SAVALAI EARKKA THAYARA AADARATTUDAN

    ReplyDelete
  6. அ.ஹ.நஜீர் அகமது-(துபாய்)June 11, 2012 at 2:25 PM

    கொள்கை என்ற பெயரில் தானும் ஏமார்ந்து தன்னை சார்தவரையும்
    ஏமாற்றி ஊர்மக்களையும் ஏமாற்ற ஒரு கூட்டம் அல்லாஹ் நம் சமூகத்தை நேரான வழியில் இழுத்து செல்வனாக ஆமீன் .

    தன்னை சார்ந்தவர்கள் இந்த தேர்தலில் வென்றிடவேண்டும் என்பதில் இரு
    தரப்பினரும் உறுதியாக இருக்கிறார்கள் அல்லாஹ் யாருக்கு ஆட்சியையும்
    அதிகாரத்தையும் கொடுப்பவன் என்பதை மறந்து தாங்கள் ஆன்லைன் சப்போர்ட் செய்பவர்கள் வென்றிடவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள்

    இதில் நல்லவர்களும் வல்லவர்களும் ஈமான் அறிந்தவர்களும் வரவேண்டும் என்பதில் இவர்களுக்கு உடன்பாடில்லை கொள்கை என்ற பெயரில் எந்த அநியாயம் செய்தலும் பரவாஇல்லை தனக்கும் தன கொள்கைக்கும் சப்போர்ட் செய்பவர்கள் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வரவேண்டும்.

    மனிதன் நிச்சயமாக மாறமாட்டன் ஏன் என்றால் அவன் மனதில் ஈமான் இல்லை வஞ்சக புத்தி இருக்கிறது தன்னை இழிவு படுத்துபவர்கள் இழிவுபடவேண்டும் தான் செய்த தவறை ஊரின் மீதும் ஊர்மக்களின் போட்டு தான் நல்லவனாக வாழ வேசம்போடவேண்டும் .

    உங்களுக்கு எல்லாம் ஏன்டா கொள்கை கலிமா சொல்லியும் முஸ்லிம் ஆகவில்லையே தன்னுடையா சுய நலத்திற்காகவும் தன்னுடையா உள் நோக்கதிர்ககவும் இஸ்லாத்தின் கொள்கையும் விட்டு கொடுக்க தயார் என்ன ஜென்மமம் நீங்கள்.

    உங்கள் கொள்கை என்ன ஊருக்கு உபதேசம் செய்வது மட்டும்தானா நீங்கள் சீர்பட மாட்டீர்களா முதலில் தன்னை சுத்தபடுத்தி கொள்ளுங்கள் தவ்ஹீத் கல்யாணம் என்ற பெயரில் வரதட்சணை மட்டும் வாங்க மாட்டேன் என்று சொல்வது நல்ல சொத்து பத்து உள்ள இடத்தில கல்யாணம் முடிச்சி நான் தவ்ஹீத் முறையில் கல்யாணம் பண்ணினேன்
    என பீதி கொள்வது என்ன கொள்கைடா.

    தவ்ஹீத் கொள்கை என்றால் வரதட்சணை மட்டும் வாங்காமல் பண்ணி கொள்வது இல்லை ஈமானிற்காக இஸ்லாத்திற்காக உயிரை விடுபவன் தவ்ஹீத் கொள்கை உள்ளவன், அடுத்தவனை காட்டி கொடுப்பவனும் அடுத்தவன் உயிரை எடுப்பவனும் தவ்ஹீத் கொள்கை உடையவனாக
    இருக்க முடியாது .

    எத்தனையோ ஏழை எளிய குமர்கள் இருப்பார்கள் அவர்களை எல்லாம் கரை சேர்க்க இந்த தவ்ஹீத் வாதிகள் முன் வந்தால் மேடையின் மீதும் முழக்கம் செய்தால் ஒத்து கொள்கிறேன் நீங்கள் தவ்ஹீத் கொள்கை வாதி என அதை விட்டுட்டு ஊர் ஓலை தரமாட்டேன் என்கிறார்கள்
    அதான் மாலை போட்டேன் தொப்பி போட்டேன் என்ன கொள்கை அரவேக்காடு நான் இல்லை தவ்ஹீத் கொள்கை என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் அரை வேக்காடு .

    என் அன்பிற்கினியவர்களே கொள்கை என்ற பெயரில் தயவு செய்து ஏமாற்ற வேண்டும் எந்த ஜாமத்தில் இருந்து போகட்டும் அவன் நல்லவனா அல்லாவுக்கு பயபடுபவனா அவர்கள் வரட்டும் நிரவகதிர்க்கு நாங்க சப்போர்ட் பண்றவன் தான் வரணும் ஆதரவு தாருங்கள்
    என்று எந்த ...........வோட்டு கேட்டாள் தயவு செய்து அவர்களை புறக்கணியுங்கள் மக்களுக்கு தெரியும் யாரு திருடன் யார் நல்லவன் .

    ஊரின் மீதும் அக்கறை உள்ளவர்கள் போல் ஏமாற்றி கொண்டு இருக்கும் கண்ணியவான்களே ஏமாற்றியது போதும் மக்கள் விளித்து கொண்டார்கள் ஒற்றுமை யாரு விரும்புகிறார்கள் என்று அல்லாஹ் அறிவான் .

    நிச்சயமாக அல்லாஹ் நம் அனைவரின் எண்ணம்போல் ஒற்றுமையான ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க என் மக்களுக்கு உதவி செய்வாயாக ஆமீன் .

    ReplyDelete
    Replies
    1. நஜீர் அவர்களே உங்களுக்கு என்ன பிரச்சனை என்றே இங்கு யாரலும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிதற்றுகிறீர்கள். என்னமோ நாங்கள் எல்லாம் காபிர்கள், ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் போலும், நீங்கள் ஏதோ அதை தட்டி கேட்பவர்கள் போல் உங்களை வெளிபடுத்தி கொள்ள முற்படுகிறீர்கள். என்னை பற்றி அவதூறாக பேசுகிறீர்கள். வரதட்சணை வேணம் என்று சொல்லிவிட்டு பணக்கார பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதாக கூறுகிறீர்கள். இது உண்மையா என்று உங்களுக்கு தெரியுமா? ஏதோ பெரிய சூபி போல பேசுகிறீர்களே, அவதூறுக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? என்னை இழிவாக பேசியும் உங்கள் கருத்தை வெளியிட காரணம் உங்களை பற்றி அனைவரும் அறியவே!! கண்டிப்பாக உங்கள் மீது எனக்கு கோபம் வரவேயில்லை, மாறாக அனுதாபம் தான் வருகின்றது. உண்மை எது என்று உங்கள் சிறிய புத்தியை கொண்டு சற்று சிந்தித்து பாருங்கள், இல்லை இதுபோல் சம்பந்தமில்லாமல் ஒரு கருத்தை வெளியிட்டு கொண்டிருந்தால் அல்லாஹ் நாடினால் ஒருவரும் உஙகளை வேறு பார்வையோடுதான் பார்ப்பார்கள்.

      Delete
    2. அ.ஹ.நஜீர் அகமது-(துபாய்)June 12, 2012 at 12:27 PM

      சகோதரர் நௌஷத் அவர்களே எனகொன்றும் பிரச்னை இல்லை இந்த சமூதாயத்தில் நடக்கும் அவலங்களை
      கண்டும் காணமல் போனால் எனகொன்றும் பிரச்னை இல்லை ஆனால் இனி என்னால் அமைதியாகவும்
      இருக்க முடியாது நான் ஒன்றும் சூபி இல்லை ஒன்றல்ல இரண்டு அல்ல நம் இயக்கமான மூன்றில் களப்பணி
      13 வயதில் இருந்து அவனுக்கும் இவனுக்கும் போஸ்டர் அங்க கூட்டம் இங்க கூட்டம் என எல்லாத்திலும் 25
      வயது வரை ஒரு பைசாவுக்கும் ஆசை படாமல் பேருக்கு ஆசை படாமல் தன் பணியை மட்டும் செய்து வந்தவன் ஆனால் மிஞ்சியது அவனவனுக்கும் தலைவன் அல்லது இயக்கத்தில் எதாவது பதவி ,இதை மட்டும் நோக்கமாக கொண்டு செயல் படுகிறான் ஆனால் கொள்கை மறந்து இருக்கும் கொள்கை ஒன்று வாழும் வாழ்கை ஒன்று என வாழ்ந்ததினால் அவனை பற்றி எல்லாம் எழுதும் போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது .

      பொதுவாக தவ்ஹீத் என்ற போர்வையில் இருந்து கொண்டு குளூர் மட்டும் காய்கிரான் அந்த கொள்கையை முறையாக பயன் படுத்தாமல் அதில் உள்ளவர்கள் எல்லாம் தவ்ஹீத் வாதி எனவும் மற்றவன் எல்லாம் காபிராக சித்தரிக்க படுகிறானே அவர்களின் வேதனையை எல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாதா.........

      அல்லாவுக்கு கட்டு பட்டு சஜிதா செய்யும் எல்லோரும் முஸ்லிம் தானே ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே
      சுன்னத்வல் ஜமாஅத் காரர்கள் அறியாமல் ஒரு சிலர் செய்யும் தவறை சுட்டி காட்டி தவறு என்று சொல்லாமல்
      அவர்களை எல்லாம் காபிர் என்று சொல்ல உங்களுக்கு அல்லா அனுமதி கொடுத்தானா?

      எனக்கு நீங்கள் அல்லாவிடம் தண்டனை வாங்கி கொடுப்பது இருக்கட்டும் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றி கொள்ளுங்கள் தவ்ஹீத் வாதி என சொல்லி ஏமாற்றுபவர்களை எல்லாம் உங்களுக்கு தெரியுமா
      அவர்களை முதலில் திருந்த சொல்லுங்கள் என் மீது நீங்கள் அனுதாப படவேண்டியது இல்லை என் எண்ணங்களை
      அல்லாஹ் அறிவான் என் நோக்கம் அல்லாஹ் புரிந்து கொள்வான் எந்த ஒரு தனிமனிதனுக்கும் தனி அமைப்புக்கும்

      நாங்கள் தான் சொர்க்க வாதியென சொல்ல அனுமதி இல்லை அப்படி இருக்க உங்கள் அமைப்பில் உள்ளவரை மட்டும் நேரான வழியில் செல்பவர் என கூட்டம் சேர்க்கும் கூடத்தில் இருந்து வந்தவன் அல்ல அசத்தியம் எது சத்தியம்
      எது என தனக்கு தானே உணர்த்து வாழ்ந்து கொண்டிருப்பவன் .

      நான் சிறு புத்தி காரணகவே இருந்து போகிறேன் அதற்க்கு அல்லாவிடம் நான் துவா செய்து கொள்கிறேன் என்
      ஈமானை வலுபடுத்து என் ஈமானை வலுப்படுத்து என நீங்கள் என்னை சூபி அந்தஸ்து எல்லாம் கொடுக்க வேண்டாம்

      நீங்களே சூபியாக இருந்து கொள்ளுங்கள்.சம்ந்தம் உள்ள கருத்தை தான் எழுதுகிறேன் நீங்கள் சப்போர்ட் பண்ணுபவர் ஊர் மக்கள் என்ன பேசி கொள்ளுகிறார்கள் தெரியுமா தவ்ஹீத் வாதிகள் என சொல்கிறார்கள் அதில் ஒரு அமைப்பிலும் உள்ளவர்கள் போல் தெரிய வில்லை ஆனால் இப்படி பேசி கொள்கிறார்கள் ஊரின் மீது தங்களை போல் அக்கறை உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆதலால் தங்கள் தன் ஒற்றுமை விரும்புபவர்கள் தங்கள் தன் நேரான வலையில் செல்பவர்கள் என நமக்குள் நாம் பிரிந்து செல்லவேண்டாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய்ய நோக்கம் என்னை பற்றி அறிந்து இந்த சமூகம் கிரீடமா கொடுக்க போகிறது வாழும் வாழ்க்கையை அண்ணனாக தம்பியாக ஆயிரம் அமைப்புகள் நமக்குள் இருந்தாலும் முஸ்லிமுக்கு பிரச்னை என்று வரும்போது முஸ்லிமாக பார்க்க வேண்டும் சுன்னத் வால் ஜமதகவோ அல்லது தவ்ஹீத் ஜமதகவோ இல்லை .

      Delete
  7. அஸ்ஸலாமு அழைக்கும் .... வர
    நாகரிகம் என்ன என்று தெரியாமல் கருத்துகள் எப்படி எழுத வேண்டும் என்று புரியாமல்
    கம்ப்யூட்டர் முன்னால் உக்கார்ந்து எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் என்று
    எண்ணத்தில் எழுதி இருக்கிறார் இந்த நஜிர். நீடூரில் நடக்க இருக்கும் தேர்தல்
    கொள்கை சம்பதமான தேர்தல் இல்லை அதை நீ முதலில் புரிந்து கொள் தேர்தலில்
    நிற்கும் இரண்டு தரப்பினரும் தௌஹீத் கொள்கை கொண்டவர் இல்லை. ஊரில்
    நடப்பது நாட்டாண்மை தேர்தல் தொவ்ஹீத சுன்னது ஜமாது தேர்தல் அல்ல நஜிர்
    உனக்கு மன வியாதியா அறிவுக்கு அப்பாற்பட்டு நீ எழுதி இருக்காய் . ஊரில் பல
    வருடங்களா நாட்டாண்மை என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடத்தி வந்தார்கள்
    அதை கேட்க உனக்கு துனிச்சல் இல்லை நீ தனி மனிதனை விமர்சனை செய்கிறாய்
    நீ கருத்துகள் எழுதனும் என்று விரும்பினால் தேர்தலை பற்றி எழுது . தௌஹீத்
    கொள்கை சம்பந்தமா நீ எழுதாத . நீ முதலில் நல்ல மன வியாதி டாக்டர் வசம்
    உன் உடல் நலத்தை காண்பிக்கவும் .நீ என்ன மார்க்க அறிஞரா இணைய தலையத்தில்
    என்ன செய்தி வந்து இருக்கு என்று படித்து பார் அதற்கு கருத்துகள் எழுது புரிதா .
    தேவை இல்லாமல் தௌஹீத் சம்பந்தமா நீ எழுதினால் பாதிக்க படுவது நீ தான்
    சிந்தனை செய்து கருத்துகள் எழுது .

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது-(துபாய்)June 12, 2012 at 2:33 PM

      வா அழைக்கும் சலம் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா எனக்கு தெரிய வில்லை இருந்தாலும் பதில் கூறுகிறேன் கம்ப்யூட்டர் முன்னால் உக்கார்ந்து மக்களை ஏமாற்ற வில்லை நிர்வாக மாற்றத்தை அல்லாஹ் நாடுகிறான் மாற்றபோகிறான் ஆனால் உங்களை போல் நாங்கள் தான் மற்றம் ஏற்படுத்த போகிறோம் எனஏமாற்றுபவர்கள் இல்லை நடுநிலைவாதிகளின் முயற்சி அவர்களின் துவா இந்த தேர்தல் ஆனால் .

      நம்ம ஊரில் நடப்பது தௌஹீத் சுன்னத் வால் ஜமாஅதுக்கும் நடக்கும் தேர்தல் இல்லை இதைதான் நான் உங்களிடம் சொல்கிறேன் இருவேறு பட்ட கருத்துடையவர்கள் நாங்கள் ஊரை சீர்படுத்து கிறோம் என போட்டி இடுகிறார்கள் இந்த இரு குருபிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால்
      ஒரு சாராரை மட்டும் ஆதரிப்பதின் அவசியம் என்ன ஊரை ரெண்டாக்கி கூத்தாடிகள் கொண்டடுவதர்ககவா விளித்து கொள்ளவேண்டும் நம்மை எதிரி வட்டம் இட்டு கொண்டிருக்கிறான் நாமெல்லாம் ஒற்றுமை இழந்து
      காணப்பட்டால் எளிதாக நம் பொருளாதரத்தை சீர் குலைதுவிடுவான் .

      சகோதரர் எனக்கு மன வியாதியா என்று கேட்கிறார் மன வியாதி உள்ளவனை எந்த நிறுவனமும் வேலையில்
      அமர்தாது இப்போ நான் செய்யும் வேலை மூலம் என் குடும்பத்தை நடத்துகிறேன் நீங்க இப்ப தெளிவா
      ஆகிவிட்டீர்களா மன வியாதி உள்ளவர்கள் தான் தன்னுடைய்ய பெயரை வெளியிட பயபடுவார்கள்
      இப்போ புரிந்ததா யாருக்கு மன வியாதி என .



      மார்க்கத்தை பத்தி மார்க்க அறிஞர்கள் சொன்னால் அவர்களை குறை கூறுகிறீர்கள் அது தவறு இது தவறு இல்லாத ஒன்றை ஆதாரம் இல்லாததை சொல்கிறார் என சின்ன சின்ன பயல் எல்லாம் P .J .......பேசியதை அரைகுறையாக கேட்டு பள்ளிவாசலில் சண்டை இதுதான் நீங்கள் தெரிந்த மார்க்கமா சிந்தியுங்கள்.......................

      சகோதரரே என்னை அடையாளம் காட்டி கொள்ள உங்களிடம் இதை எல்லாம் தெரிவிக்க வில்லை இப்படி எல்லாம் நமக்குள் இப்லிஸ் நம் ரத்தத்தின் உள்ளே புகுந்து நம்மை பிரிகிறானே அதை நாம் உணர்த்து கொள்ளாமல் போகிறோமே ஈமானின் வலிமை குறைந்து நீங்களும் நானும் சண்டை இட்டு கொள்கிறோமே மனம் வருந்தி தெரிவிக்கிறேன் .

      அப்புறம் சகோதரர் புரிந்து கொண்டு பதில் எழுது என்று எழுதி இருக்கிறார் இல்லை என்றால் பாதிக்க படுவேன் என்று
      மிரட்டுகிறார் உங்கள் பெயரை எழுதவே திராணி இல்லை நீங்கள் எல்லாம் உங்களை ஒற்றுமையாக இணைப்பதில்
      உயிரை இழந்தாலும் அதற்காக என் குடும்பம் தான் வருத்த படுமே தவிரே எனக்கு எள் அளவும் பயம் இல்லை வாழ்கின்ற
      வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து வாழ்கின்றேன் யா அல்லாஹ் என் சகோதரன்
      அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பிரிந்து நிற்கிறான் அவனை ஒன்றிணைக்கும் பணியில் இருப்பவர்கள்
      அனைவருக்கும் வெற்றியை தாடா யா அல்லாஹ் ஆமீன் .

      Delete
    2. தனி நபர் விமர்சனம் கூடாது என்று கூறும் இந்த நஜீர் அவர்தான் என்னை தனிப்பட்ட முறையில் பேஸ்புக்கில் அனைவருக்கும் முன்பாக விமர்சனம் செய்தார். அதற்கு முன் இவர் எனக்கு அறிமுகமே கிடையாது, இருந்தாலும் விமர்சனம் செய்தார். இதற்கும் ஏதாவது பக்கம் பக்கமாக விளக்கம் என்ற பெயரில் கண்டிப்பாக உளருவார். இவர் ஒரு விளக்கம் ஒன்று கொடுத்ததை அனைவரும் கவனித்தீரா? அதாவது இவர் சொல்வது மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தினால் அவர் நேர்வழியில் இருக்கிறார் என்று அர்த்தமாம். என்ன ஒரு அறிவு!!!! தாங்கமுடியல.

      Delete
  8. இன்ஷா அல்லாஹ் நமது ஊர் பிரச்சனைகள் இன்றி முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமின் ,

    ReplyDelete
  9. துபாய் சங்கத்தில் கொள்கை ரீதியாக உபதேசம் செய்கிறார்கள் என்று ஊரிலும் துபைலும்
    பெரும்பாலான மக்கள் குற்றம் சாட்டினார்கள்
    அதற்காக மாற்றம் வரவேண்டும் என்பதற்காகதான் புதிய நிவாகிகள் நாம் தேர்தெடுத்தோம் அதைப்போல்

    அதைபோல் நம் மார்க்கத்துக்கு புறம்பான காரியங்களை செய்யவேண்டாம் அணைத்து ஜமாதர்களின் அறிவுரைப்படி மாற்றம் வேண்டும் என்பதற்காக புதிய நிர்வாகிகளை கொண்டுவருவோம்

    ReplyDelete
  10. கொள்கை ரீதியாகவோ சுயநலதிர்க்காகவோ ஒருதலை பட்சமாக யாருக்கும் துணை நிற்காதிர்கள் ஒற்றுமையை பேணிக்காப்போம் பெரும்மானாரின் வழி நடப்போம் முஃமீன்களாக ஒரே சமுதாயம்" ஒரே கோட்பாடு"
    ஒரே கொள்கை அது இறைக்கொள்கை -

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்!

    நமதூரில் நடக்கும் தேர்தலை நினைக்கும் போது மனதிற்கு சங்கடமாக உள்ளது. பதவிக்காக எந்தளவு கீழிறங்குவார்கள் என்பதை இப்போது தான் நேரடியாக காண்கிறேன்.

    வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடக்கவிருக்கும் தேர்தலை தவ்ஹீத் ஜமாத்திற்கும், சுன்னத் ஜமாத்திற்கும் நடக்கும் போட்டியாக சித்தரிப்பது மிகத் தவறான ஒன்றாகும்.

    அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் எத்தனை பேர் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?

    குர்ஆன், ஹதீஸ்படி ஒருவன் ஒரு கருத்தை சொன்னால் உடனே "நஜாத்" என்று முத்திரை குத்திவிடுவது உண்மையான முஸ்லிமுக்கு அழகல்ல. இதற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    தேர்தலை பொருத்தவரை சிலர் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தாங்கள் எந்த பக்கம் நிற்கிறோம் என்பதையும், அதற்கான காரணத்தையும் விளக்கி சொன்னால் நலம்.

    முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    - திருக்குர்ஆன் 5:8

    ReplyDelete
  12. A.R.SULAIMAN SHAITJune 12, 2012 at 1:31 PM

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
    (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    ReplyDelete
  13. INTHA SAMUDAYATTIL VENDAAM NAMADOORIN NADAKKUM ANIYAYANGALAI THATTI KETTKA TUPPU IPPOLUTHUTHAN IRUKKIRATHA SAMUDAYA AKKARAIYAI PATTRI PESA ENNA ARUGADAI IRUKKIRATHU OORAI SOORAIYADIYAPOTHU ENGE PONATHU UNGAL SAMOOGA AKKARAI MUDALIL NEENGAL AANMAGANAGA IRUNGAL PIRAGU SAMOOGATTAI TIRUTTUNGAL

    ReplyDelete
  14. நாம் யாரையும் தனி புகழ் பாடவில்லை,என்று சொல்வதற்கே தகுதி அற்றவர்கள் யார் பொது நல வாதி குழப்பவாதி கூட்டங்களே உங்களின் நோக்கம் என்ன ஊரில் கூட இந்த நாள் வரை, இந்த நேரம் வரை எந்த ஒரு பிரச்சனைகள் இல்லை எல்லோரும் தேர்தல் நாள் நோக்கிக்கொண்டு உள்ளார்கள் அவதூறு அவப்பெயர் என்ற நோட்டீஸ் யார் ஒட்டியது அவதூறாக பேசியது யார் - 2 அணியினரும் வெகுதூரத்தில் இல்லை நீடூரில் தான் உள்ளார்கள் ஆனால் UAE ல் இருந்துக்கொண்டு ஒருசிலர் சொல்வதை வைத்துக்கொண்டும் தொலைப்பேசியல் கேட்டுக்கொண்டும் களம் இறங்கியுள்ளோம் விவாத பேடை அமைக்கவுள்ளோம் என்று மார்தட்டிக்கொல்லாமல் தொலை நோக்கு கண்ணோடு பார்க்கவேண்டும் என்ன நடக்கிறது என்ன நடக்கபோகிறது என்று

    "போர்க்களம் போல் சித்தரிக்கவேண்டாம்"

    ஊரில் தவறு செய்தார்கள் முன்னால் நிவாகிகள் - ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் எல்லோரும் புதியவர்கள்தான் (இதுவரை இருந்த நிவாகத்தில் இருந்து எந்த ஓர் நபரும் இல்லை ) நீங்கள் மட்டும் ஒரு அணிக்கு சாதகமாக ஏன் செயல்ப்படவேண்டும் - ஒருக்காலத்திலும் கனவு காணவேண்டாம் இவர்களை வைத்து இந்த இயக்கத்தை வலுவு படுத்தலாம் என்று ஒன்று என்றால் ஒன்பதாக சித்தாரிகாதிகள் விபரிததில் போய் முடியும் - அந்நியர்களுக்கு இடம் கொடுக்கவேண்டாம் - மார்க்கத்தை அரசியலாக்காதிர்கள் வேண்டாம் இந்த வீண் ஓம்பு

    இரண்டு அணிகளுக்கிடையே வாக்குவாதம் அல்லது அவதூறு நோட்டீஸ் போன்ற சம்பவம் என்றால் ஊரிலே இருக்கின்றனர் அவர்களும் ரோசம் உள்ளவர்கள் பிரச்சனைகளில் இருந்து சமாதானம் அடைவார்கள் -
    இன்ஷா அல்லாஹ் 2 அணிகளும் சம நிலை பெற்று நிர்வாகம் அமைதல் வேண்டும் பிரச்சனைகள் இன்றி தன்னிச்சையான முடிவுகள் இல்லாமல் கலந்தாலோசித்து சரியத் சட்டம் , சாசன சட்டம் , மார்க்கம்,
    ஊர் நிவாகம் போன்ற எல்லா தகுதிகளும் உள்ளவர்கள் அவார்கள் 2 அணிகளில் ஒரு அணி தனிபலம் பெற்றால் நல்ல செயல்களுக்கு ஆதரவும் ,தவறை தட்டிகேட்க்கவேண்டும் - நாம் ஊர் மக்கள் எல்லோரும் பணக்காரன் முதல் ஏழை வரை பாகுபபடின்றி .........

    ReplyDelete
  15. உசைன், குவைத்June 12, 2012 at 3:30 PM

    நான் தவ்ஹீத் கிடையாது என்று ஒருவன் கூறுவானேயானால் அவன் முஸ்லிமே கிடையாது. அதுபோல் நான் ஒரு சுன்னத் வல் ஜமாத் என்று சொன்னாலும் அவன் முஸ்லிம் கிடையாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சந்தேகம் இருந்தால் நமதூர் மதரஸா ஆலிம்களிடம் கேட்டுப்பாருங்கள். ஆனால் தவ்ஹீத் மற்றும் சுன்னத் இது இரண்டுமே இருந்தால் தான் அவன் முஸ்லிமாக முடியும். கருத்து எழுதும் சகோதரர்கள் தவ்ஹீத்வாதிகள் காபிர்கள் போன்றோ அல்லது தீவிரவாதிகள் போன்றோ கூறுவது பெரும் தவறு பாவமும் கூட. வேண்டுமானால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்று கூறிக்கொள்ளுங்கள். ஊரில் தற்போது நடக்கும் தேர்தல் பழமையான பள்ளிவாசலை இடித்து நாசம் செய்த, புதிய பள்ளி கட்டுகிறோம் என்று கூறி கோட்க்கணக்கில் வசூல் வேட்டையாடி அதற்கு கணக்கு காட்டாத, இருநூறுக்கும் மேற்பட்ட ஜமாத்தார்களின் முன்பாக (பகலி) வெற்றிப்பெற்ற அலி என்பவரிடம் பொறுப்பைக்கொடுக்காமல் ஜமாத்தார்களை முட்டாளாக்கிய, பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொண்ட அயோக்கியர்களிடம் நன்கொடை என்ற லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்துவைத்த, காரணை பள்ளிவாசலில் ஏற்றி அவனுக்கு சோடா / சர்பதி வாங்கிக்கொடுத்து தன்னுடைய விசுவாசத்தைக்காட்டிய, தன்னுடைய சொந்த பிரச்சனைகளுக்காக ஜமாத்தார்களை தாக்கி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பள்ளிவாசல் / ஊர் பணத்தை வாரியிரைத்த, ஜமாத்தார்களை மிரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்ட, பதினைந்து ஆண்டுகளாக ஊரையே நாசம் செய்த முன்னால் நிர்வாகிகளின் பினாமிகளுக்கும், பழைய நிர்வாகிகளின் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் தட்டிக்கேட்கும் ஜமாத்தார்களுக்கும் இடையே இந்த தேர்தல். யார் வேண்டும் என்று ஜமாத்தார்களே முடிவு செய்துக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  16. ஹமீது, பாங்காக்June 12, 2012 at 3:37 PM

    சகோதரர் மனநோயாளி நஜீர் அஹமது சொல்வது மிகவும் காமெடியாக இருக்கிறது. 13 வயதிலிருந்து 25 வரை ஊரில் என்ன செய்தார் என்று நேற்று பிறந்த குழந்தைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். துரை இறைச்சி கடையில் அவர் அடித்த அநியாயங்களையும், குடிபோதையில் செய்த பல்வேறு இரகளைகளையும், வெளியூர்களில் வேறுமாதிரி சிக்கிகொண்டு தப்பித்த தகவலும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும். குடி குடிப்பதையும், ரகளை செய்வதையும் எந்த இயக்கம் செய்கிறது என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை அரசியல் கட்டியை இஸ்லாமிய இயக்கமும் ஒன்றென்று நினைத்துவிட்டார் போலும். உண்மையில் எந்த நிறுவனமும் மனநோயாளிக்கு வேலை தராதுதான். அதுதான் நமக்கும் ஆச்சர்யம். துபாயில் மனநோயாளிக்கும் வேலை தருகிறதே என்று. பாவம் அந்த நிறுவனம்.

    ReplyDelete
    Replies
    1. அ.ஹ.நஜீர் அகமது-(துபாய்)June 12, 2012 at 4:24 PM

      சகோதரர் ஹமீத் நம் ஊர்கரரா நம் ஊர்க்காரர் வேறு பெயரில் என்னை பற்றி தவறாக விமர்சனம் செய்கிறாரா அறிய வில்லை ஆனாலும் பதில் கூறுகிறேன் நான் இறைச்சி கடையில் குடி போதையில் இருந்தது உங்களுக்கு எப்படி தெரியும் ஒண்ணு நம் இருவரும் சேர்ந்து இந்த தவற்றை
      செய்திருக்க வேண்டும் .......நீங்கள் இப்படி என்னை தவறாக விமர்சனம் செய்து என் வாயை அடைக்க
      முற்படுகிறீர்கள் நீங்கள் தவ்ஹீத் வாதி என ஏமாற்றும் அவலம் வெளிபடுகின்றதே என்ற கோபத்தின் உச்சிக்கு சென்று இல்லாததை இருப்பதை போல் தனி மனித விமர்சனத்தில் இறங்கி விடீர்கள் உங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் பாக்கர் அவர்களுக்கு என்ன வேலை பண்ணினார்களோ அதை திருத்தி கொள்ளுங்கள் இன்னும் எதனை பாக்கர் சகிலா இருக்கிறார்கள்
      உங்கள் இயக்கத்தில் நீங்களும் அந்த இயக்கத்தில் உள்ளவர் போல் உள்ளது அதான் இல்லாததை இருப்பது போல் திரித்து மக்களை ஏமாற்ற நினைகிறீர்கள்

      பரவா இல்லை விமர்சனம் செய்யுங்கள் இல்லாததை இருப்பது போல் சொல்வதின் மூலம் கொஞ்ச நஞ்ச பாவமும் கழியட்டும் இன்ஷா அல்லாஹ்.........................

      எவன் ஒருவனுக்கு தான் சொல்லும் கருத்துகள் எரிச்சலை ஏற்படுத்துகிறதோ நன் சரியானா வழியில் தான் நேரான வழியில் தான் செல்கிறேன் அல்ஹம்ந்துளில்லாஹ்.........

      Delete
  17. Please mind your words otherwise there is no defference between him and us.
    Mohd.

    ReplyDelete
  18. AMEEN (SAUDI ARABIA)June 12, 2012 at 4:43 PM

    sakotharar ஹமீது avarkaley thannudiyya karuthil orunalum matram illamal otrumaiye than mulumutchaga seyalpadum sakotahar நஜீர் avarkalin meethu setrai vari iraikkum makkalukku thakka padathai koduppan Allah avarin otrumai yendra yenna ottam padikka padikka yellorum otrumaiyaga irukka vendum yendru yennukirathu aanal thani manitha vimarchanam seithu avarin yeluthukalai seerkulaikka oru nalum nadu nilai vathukal anumathikka mattom .

    sakotharar நஜீர் manathai thidapaduthi kollungal Allah nam pakkam irukiraan thodarattum otrumai pani vetri namathey............

    ReplyDelete
  19. தனிநபர் விமர்சனம் என்று மட்டும் பார்க்காமல் "இவரெல்லாம் நல்லவர் போல் வேசமிடுகிறாரே" என்று பாருங்கள். நான் உன்கூடு சேர்ந்து ரகளைசெய்தேன் என்றே வைத்துக்கொள்வோம். ஊரில் நடக்கும் அநியாயத்தினை தட்டிக்கேட்க துணிவில்லாமல் எதற்கெடுத்தாலும் தவ்ஹீத் ஜமாதினை மட்டுமே எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தவ்ஹீத் என்ற கொள்கையை எதிர்ப்பதுதான் உனது அறிவீனம். தனிமனித விமர்சனம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாக்கர் பற்றி நீயே பேசுகிறாயே இதுதான் நீ கூறும் தனிநபர் விமர்சனமோ. எப்படியும் நீ தவ்ஹீதை திட்டிக்கொண்டே இருப்பாய். அது நன்றாக தெரிந்ததுதான். ஆனால் ஊரில் நிகழவிருக்கும் தேர்தலுக்கும் தவ்ஹீதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமதூர் நிர்வாகம் பற்றி தீர்மானிக்க தவ்ஹீத் காரன் யார்?

    ReplyDelete
  20. தனி நபர் விமர்சனம் கூடாது என்று கூறும் இந்த நஜீர் அவர்தான் என்னை தனிப்பட்ட முறையில் பேஸ்புக்கில் அனைவருக்கும் முன்பாக விமர்சனம் செய்தார். அதற்கு முன் இவர் எனக்கு அறிமுகமே கிடையாது, இருந்தாலும் விமர்சனம் செய்தார். இதற்கும் ஏதாவது பக்கம் பக்கமாக விளக்கம் என்ற பெயரில் கண்டிப்பாக உளருவார். இவர் ஒரு விளக்கம் ஒன்று கொடுத்ததை அனைவரும் கவனித்தீரா? அதாவது இவர் சொல்வது மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தினால் அவர் நேர்வழியில் இருக்கிறார் என்று அர்த்தமாம். என்ன ஒரு அறிவு!!!! தாங்கமுடியல.

    ReplyDelete
  21. அக்பர் என்ற நபரால் வந்த குழப்பம் எதுவரை சென்றுள்ளது பார்த்தீர்களா சகோதரர்களே! இவர் தற்பொழது பதவி விலகும் பழைய நிர்வாகத்திற்கு ஆதரவாக கருத்தி எழதியவர் அவர் எழதிவிட்டு சென்று விட்டார் இங்கு இவ்வளவு குழப்பம். அதனால் தான் தரம் தாழ்ந்து தனி நபர் விமர்சனம் செய்யாதீர்கள் என்பது. இவர் பணம் கொடுத்தார் அவர் தரவில்லை அதையும் நான் உறுதியாக கூறமுடியாது வேண்டுமானால் வேறு இரண்டு நபர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்,இது எங்களுக்கு தேவையா?
    எங்களுக்கு வேற வேலையில்லையா? அப்படி இருக்கையில் அவர்கள் தங்கள் பிரச்சனையை அவர்கள் சரி செய்துக்கொள்ளட்டும். நாங்கள் இங்கு குறிப்பிடுவது ஊர் பிரச்சனையை தான், இங்கு நாங்கள் தேடும் விடை கிடையித்தால் நாங்கள் வாக்களிக்க தயார்

    1. நிர்வாக மாற்றம் வேண்டுமென்று 4 வருடங்களுக்கு நமதூர் பள்ளிவாசலில் தேர்தல் நடந்ததா இல்லையா? இல்லை என்றால் ஊர் கூடி வாக்களித்த மக்களை பழைய நிர்வாகிகள் ஏன் முட்டாளாக்கினார்கள்? மக்கள் முட்டாளா?
    2. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் கவலையில்லை ஆனால் ஊர் நிர்வாகிகள் என்று பள்ளிவாசல் வசூலுக்கு வந்த போது உங்களை கண்ணியப்படுத்தினோம்.இரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தை, தந்தையின் ஆப்ரேசன், சகோதரியின் திருமணம், பழைய கடன்கள்,எல்லா பிரச்சனைகளையும் தள்ளி வைத்துவிட்டு ஊரை பள்ளி இடிக்கப்பட்டு விட்டது இது நமது சொந்த பிரச்சனை என்று நினைத்த ஒவ்வொரு நீடுரானும் நினைத்து பாடுபட்டு கட்டினோமே எதாவது கணக்கு கொடுத்தார்களா? ஒவ்வொரு முறையும் ஊர் வரும் போது எங்கே கணக்கு வெளியிட்டார்கள? ஊர் என்ற விசயத்தில் உயிர் கொடுத்து நின்றமே நம்முடைய பங்களிப்பு என்ன? இவர்கள் வெளியிட்டிலிருந்தால் வாழையடி வாழையாக நம்முடைய சந்ததிகள் பார்த்து பெருமைப்படமாட்டார்களா?
    செய்தீர்களா? நான் என்ன செய்தேன் என்று எனக்கே நினைவியில்லை? எங்கே என்னுடய சங்கதீர்களுக்கு தெரியப்போகிறது.

    3 பழைய நிர்வாகிகள் ஆதரவுடன் தேர்தல் கண்டுள்ள நபர்கள்
    பொதுநிலை வாதியாக இருக்கட்டும் பரவாயில்லை ஆனால் இவர்களை முன்னிறுத்தி இர்ப்பது யார். இவர்கள் வென்றால் இவர்களை இயக்கப்போவது யார்? மனசாட்சியுடன் அக்பர் பதில் சொல்லுங்கள்
    இவர்கள் வெளியிட்ட நோட்டீஸ் கண்டிப்பாக ஊர் ஜமாத் செலவில் தான் செய்து இருப்பார்கள், பள்ளிவாசலில் தான் கூடி வெளியிட்டு இருக்கிறார்கள், அப்ப ஊரின் பொதுவிசயங்களை பயன்படுத்தும் போது மற்றவர்களுக்கு அதில் உரிமை இர்க்கிறதா இல்லையா?
    பொது சொத்தை எடுத்து உங்கள் மனம் போல் பயன்படுத்துவீர்கள் இங்கு சகோதரர் நவ்சாத் ஊரின் நிலைப்பாட்டை அவர் சொந்த செலவில்
    வெளியிட்டால் அதில் நீங்கள் நினைத்ததை தான் எழத வேண்டும் என நிர்பந்தீப்பீர்,அக்பர் அவர்களே முதலில் அதிகாரத்தாலும் பணத்தாலும் எதையும் வாங்க முடியாது. இந்த பழைய நிர்வாகிகள் நல்ல முறையில்
    நடந்திருந்தால் அவர்கள் அல்லாஹு தவிர எதற்கும் பயப்பிட தேவையில்லை தேர்தல் களம் பஞ்சு மெத்தை. ஆனால் இவர்களுக்கு எதனால் முற்புதறாக மாறியது.
    தனி மனித ஒழக்கம் அது ஒவொருவருடைய மனசாட்சிக்கும் அல்லாஹுக்குமட்டுமே தெரியும் வெள்ளை கைலி வெள்ளை சட்டையில் இல்லை அது நாம் இருவருக்கும் பொறுதும்,

    பொதுவாக மார்க்க விசயங்களைக்குறித்து விவாதிப்பதற்கு நாம் இந்த இணய தளத்தை பயன் படுத்தாக்கூடாது.ஆனால் ஒன்று நஜாத் என்று முத்திரை பொழதனைக்கும் குத்திகிறீர்கள்.இங்கு அவர்கள் கண்ணியத்துடன் தனி மனிதன் குறித்து யாரும் வெளியிடவில்லை. அவ்ர்கள் கண்ணியத்துடன் பதில் அளிக்கிறார்கள்.பொறுமையாக இருக்கிறார்கள், மற்றவர்கள் தான் தாங்கள் அவர்களை குறைக்கூறி
    உங்களை கண்டுமுகம் சுளிக்க வைக்கிறார்கள்.
    நீங்கள் கூறும் அணியில் எதாவது குறைக்கூறமுடியாத ஒரு நபரின் பெயரை நீங்கள் வெளியிடுங்கள் உங்களால் முடிந்தால்.கண்டிப்பாக முடியாது நீங்கள் வெளியிடமுடியாது ஏனென்றால் ஒவ்வொரு பெயரை நினைக்கும் போது நிச்சயமாக அவ்ர்களின் குறை உங்கள் கண் முன் வரும்

    இப்படிக்கு
    ஹுமாயூன்
    (அகபர் அவர்களுக்கு பெயரின் பொருள் தெரியம்)

    ReplyDelete