அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, September 14, 2012

இதுதான் நியாயமா?


நமது ஊரில் ஊரில் புதிதாக தேர்ந்தெடு
க்கபட்ட நிர்வாகத்தினரிடம் ஜமாத்தில் சேர விருப்ப மனுக்கள் சில பேர் கொடுத்து உள்ளதாக இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டோம். சேர்க்க வேண்டியது நல்லது தான், ஆனால் இதற்கு எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஜமாத்தினருக்கு வெளிப்படியாக தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால் முன்னாள் நிர்வாகத்தில் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களை பெரும் தொகை பள்ளி கட்டுமான பணிக்கு வேண்டி நன்கொடை தர வேண்டும் என்று சொல்லி பணம் பெற்று கொண்டு சேர்த்தனர். நன்கொடை கொடுப்பவர்கள் தான் ஊரில் சேர தகுதியானவர்களா? நமது ஊரில் இருபது வருடங்களுக்கு மேலாக வெளியூரிலிருந்து குடி ஏறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள், அவர்கள் நன்கொடை கொடுக்க முடியாததால் இன்னும் ஊரில் சேர முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் ஊரில் புதிதாக சேர ஒரு வரைமுறை இருக்க வேண்டும். அது பணமாக இருக்க கூடாது, ஜமாத்தில் சேர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது. நன்கொடை இல்லாமல் ஊரில் என்ன சட்ட திட்டங்கள் பின்படுத்தபடுகிறது என்பதனை ஜமாத்தினருக்கு ஊர் நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். அதே போல் ஜாமத்தில் இருந்த சிலரை முன்னாள் நிர்வாகத்தினர் ஊர் நீக்கம் செய்தனர், தாமுமுக கிளை தொடங்கினார்கள் என்ற காரணம் சொல்லி முன்று பேர், வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடத்தியதற்கு ஒரு நபரையும் ஊர் நீக்கம் செய்தார்கள். இது ஏற்று கொள்ளும்படி உள்ளதா? ஊர் நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக சொன்னால் என்ன என்ன காரணத்திற்கு வேண்டி ஊர்
நீக்கம் செய்வீர்கள்? அதற்கு வரையறை உண்டா? முதன் முதலில் கிளை தொடங்கியவர்களுக்கும், முதன் முதலில் கூட்டம் நடத்தியவர்களுக்கும்    மட்டும் தான் பொருந்துமா? ஏன் என்றால் அதன் பிறகு பல கூட்டம்   நடை பெற்று உள்ளது. ஊர் நிர்வாகதினர்கள் சிலர் தாமுமுக கூட்டத்தில் பங்கு கொண்டு உள்ளார்கள். அதே போல் தற்போது தாமுமுக விற்கு கிளையும் உள்ளது. இன்னும் சொல்ல போனால் தற்காலிக நிர்வாகத்தில் தாமுமுகவினர் இருந்தனர். தற்போது புதியதாக தேர்வு செய்ய பட்டு உள்ள நிர்வாகத்திலும் தாமுமுகவினர் இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் முன்பு தாமுமுக ஒன்றாக இருந்த போது நீக்கம் செய்தனர் தற்போது தௌஹீத் ஜமாஅத் தாமுமுக என்று இரண்டாக உள்ளது நஜாத் காரர்களை நீக்கினோம் என்றால் நமது ஊரில் இந்த ஐந்து நபர்கள் மட்டும் தானா தௌஹீத் வாதிகள், நமது ஊரில் தௌஹீத் கொள்கையை பின்பற்ற கூடியவர்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வரை முறை பின்பற்றபட்டது? இவர்கள் பார்வையில் ஒரு இயக்கத்தில் இருப்பது தவறு என்றால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் தமுமுக இயக்கத்திலும் ஊர் நிர்வாகதிலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை? நடு நிலை வாதிகள் சிந்தனை செய்ய வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட மாதம் அல்லது வருடம் நிர்ணயம் செய்வார்கள் ஆனால் நமது ஊர் முன்னாள் நிர்வாகிகள் பார்வை படி கிளை தொடங்கியதும் மாநாடு நடத்தியது தவறு என்றால் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனையா? அல்லது வாழையடி வாழையாக தொடருமா? இதற்கு தீர்வு என்ன? புதிய நிர்வாகிகள் சிந்தனை செய்ய வேண்டும். ஊரில் பல பிரச்சனைகளுக்கு இது போல் முட்டாள் தனமான அணுகு முறை தான் காரணமாக இருந்து வருகிறது. ஊர் நீக்கம் செய்வது என்பது சட்டப்படி தவறான செயல். ஊர் நீக்கம் செய்ய பட்டவர்களை புதிய நிவாகத்தின் நிலை படு என்ன என்று தெளிவு படுத்த வேண்டும். நாங்கள் செய்ய வில்லை ஆகையால் நாங்கள் விளக்கம் அளிக்க முடியாது என்று சொல்ல முடியாது. காரணம் முன்பு இருந்த நிர்வாகம் .தவறான அணுகு முறையை கடை பிடித்தார்கள் இப்ப உள்ள நிர்வாகம் ஜமாத்தினரால் தேர்வு செய்ய பட்ட நிர்வாகம் ஆகையால் பழைய நிர்வாகத்தின் நிலைபாட்டை இந்த விசயத்தில் கடை பிடிக்க கூடாது புதிய நிர்வாகத்தின் அணுகு முறை எல்லரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் ஜமாத்தினரின் விருப்பம்
.
(பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்கு அந்த மறுமை வாழ்வை எற்படுத்தியுள்ளோம் நல்ல முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே 

இப்படிக்கு ,
நமது ஊர் நலனை நாடும்
துபாய் வாழ் நீடூர்-நெய்வாசல் ஜமாத்தார்கள் 

No comments:

Post a Comment