அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, December 16, 2011

பழைய நிர்வாகத்தினர் ராஜினாமா செய்தனர்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்று 16/12/2011 ஜும்மா தொழுகைக்கு முன் ஊர் கணக்குபிள்ளை ஓரு அறிவிப்பு கடிதத்தை வாசித்தார், அதில் 15/12/2011 முதல் முத்தவல்லி, நாட்டண்மைகள் அனைவரும் பதவி விலகி கொள்வதாகவும் விரைவில் புதிய நிர்வாகத்தினரை தேர்வு செய்ய தேர்தல் நடக்கும் எனவும் அறிவித்தார். அதன் பின் ஊர் நிர்வாக டிரஸ்டி ஹமீத் அவர்கள் ஊர் நிர்வாக தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் முத்தவல்லி பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென்றும் இன்ஷா அல்லாஹ் நல்ல நிர்வாகம் அமைய அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் என்று கூறிவிட்டு விடைபெற்றார். அல்லாவுக்கே அனைத்து புகழும். இன்ஷா அல்லாஹ் இனி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்து நல்ல நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது ஜமாத்தார்கள் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் நம் முயற்சிக்கு கடைசி வரை துணை புரிந்து நிற்பானாக! ஆமீன்.

No comments:

Post a Comment