அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, June 16, 2012

இன்ஷா அல்லாஹ் ஊரின் பழைய பெருமையை மீட்டெடுப்போம்.


அல்லாஹ்வின் பேருதவியால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நாள் வரை எத்திவிட்டோம். இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நம் நிர்வாகத்தை முதன் முறையாக பயமின்றி தேர்ந்தேடுக்கப் போகும் நாள். இன்று அனைத்து ஜமாத்தினருக்கும் ஓர் வேண்டுகோள்!, வெளிநாட்டில் வாழும் சில சகோதரர்கள் இந்த ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஊர் வந்திருக்கிறார்கள். எனவே இந்த ரகசிய வாக்கெடுப்பில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள், யார் யாரெல்லாம் நல்லவர்கள் என்று. எனவே நம் ஊரின் மீது மட்டும் அக்கறை கொண்ட, அல்லாஹ்விற்கு பயந்து நடக்கும் அடியார்களை தேர்ந்தெடுத்து நம் ஊரின் மீது படிந்த கரையை துடைத்து ஊரின் பழைய பெருமையை மீட்டெடுக்க கேட்டுக் கொள்கிறோம்.  
 அது போக நேற்று ஜும்மாவில் வழக்கம் போல் இமாம் அவர்கள் ஊர் ஆதிக்கவாதிகள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதையே ஒப்பித்துள்ளார்கள். அதை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment