அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, February 15, 2014

உரிமை மறுக்கப்படுகின்றது!

உரிமை மறுக்கப்படுகின்றது!
நமதூரில் இனைய தளம் நடத்தும் ஒரு சகோதரர் ,தமது குடும்பத்திற்காக திருமண சான்றிதல் ஊர் நிர்வாகத்திடம் கேட்டிருக்கின்றார். அதற்க்கு  முத்தவல்லி நிர்வாகத்தில் சிலர் கொடுக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார். காரணம் ஆறு மாதத்திற்கு முன்பு துணை இமாம் அபுபக்கரை தேடி போலீசார் நம் பள்ளிவாசலுக்கு வந்த செய்தியை இணையதளத்தில் வெளியிட்டடதாலும் தொடர்ந்து அபுபக்கரை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதால்  அவர்  கேட்ட சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள்  .சம்பவம் நடந்து ஆறு மாதம் ஆகின்றது.அப்போதே அந்த சம்பவம் பற்றி பேசாமல் தற்போது சான்றிதழ் தர மறுப்பது ,என்ன நியாயம்? அவருக்கு சான்றிதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக அணுக இருப்பதாக தெரிகின்றது. நமதூர் ஜமாத்தினரிடம் நியாயம் கேட்டு பாதிக்கப்பட்டவர் வந்த போது,அபுபக்கர் எங்கள் ஜமாத்தில் இல்லை அதனால் நிர்வாகம் அவரை விசாரிக்காது என்றவர்கள் அவரை பற்றி செய்தியை நியாயம் கிடைப்பதற்காக உள்ளதை உள்ளபடி வெளியிட்டதற்காக , ஜமாத்தில் இல்லாதவருக்காக பரிந்து கொண்டு ஜமாத்தில் உள்ளவருக்கான உரிமையை தர மறுப்பது நியாயமா?இதற்க்கு என்ன தான் தீர்வு? அவதூறு எழுதுவது தான் தவறு. உள்ளதை உள்ளபடி நியாயத்திற்காக செய்தியை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது? நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் ஜமாத்தினர் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். மதிப்பார்கள் என நம்புவோம்!!