அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, April 25, 2012

வேண்டாம் ஊர் நிர்வாகத்தில் அரசியல்


அஸ்ஸலாமு அலைக்கும்
நீடூர்-நெய்வாசல் அஸோஸியேஸன் கூட்டம் 13-04-2012 அன்று துபையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் அஸோஸியேஸன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் புதிய நிர்வாகிகள் எந்த அமைப்பையும், அரசியல் கட்சிகளையும் சாராதவர்களாக இருந்தால் நல்லது என கருத்து கூறப்பட்டது. இது வரவேற்க தகுந்த கருத்தாகும். இந்த சங்கம் அனைவருக்கும் பொதுவானது, அதில் எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் ஆதரவாக செயல்படாமல் இங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவியாகவும், ஊரில் நம்மால் ஆன உதவி செய்வதும் தான் நோக்கமாக இருக்க வேண்டும். இதே நிலையைதான் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நம்மூர் நிர்வாகிகள் தேர்தலிலும் கடைபிடிக்க வேண்டும். அரசியல் பின்பலமுள்ளவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இங்குள்ள நம் சகோதரர்கள் நம் வீட்டாரிடம் இக்கருத்தை வலியுறுத்த வேண்டும்.

யாரேனும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தலில் நின்றால் மக்கள் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் கண்டிப்பாக ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்யக்கூடியவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.பொது சேவையில் ஆர்வமும், அல்லாஹ்வின் அச்சமும் இருந்தால் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் வேண்டும். நமதூரில் முன்பு அரசியலில் உள்ளவர்களை நிர்வாகத்தில் புகுத்தியதால் பல இன்னல்களை சந்தித்தோம்.அரசியலில் இருந்து கொண்டு ஊர் நிர்வாகிகளாக வருவதால் ஊருக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதுமில்லை, ஏற்பட போவதுமில்லை, மாறாக தங்களை வளர்த்துக்கொள்கின்றனர். நாம் சொன்னால் ஊரே கேட்கும் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு தன் கட்சியை சார்ந்தவர்களை அழைக்கின்றனர். இதன் மூலம் ஊரில் தமக்கு செல்வாக்கு இருப்பதை போன்று காண்பிக்கின்றனர். ஜமாத்தார்கிடையே பெரிய அரசியல் தலைவர்களை தெரியும் என்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஊருக்கும், ஜமாத்துக்கும் என்ன நன்மை! வருகின்ற அரசியல்வாதிகளும் நிர்வாகிகள் எந்த கட்சியை சார்ந்தவரோ அக்கட்சியில் இருப்பவர்களாவே இருக்கின்றனர். எனவே தாம் சார்ந்த கட்சிக்கு சாதகமாக ஊரே இருக்க வேண்டும் என நினைப்பில் இருக்கின்றனர்.

ஜீலை மாதம் மதரசா 100வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு கண்டிப்பாக அரசியல் தலைவர்களை அழைக்கத்தான் போகின்றனர். இதனால் யாருக்கு பயன்? ஊருக்கா? அழைத்து வருபவருக்கா? கட்சியில் தமக்கு முக்கிய இடம் கிடைக்க இதுபோல் நிகழ்வுகளை தமக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இப்படி ஊரை தம் தேவைக்கு அடகு வைக்கும் இவர்கள் அந்த அரசியல் பிரமுகர்களை கொண்டு ஊருக்கு ஏதும் செய்தார்களா? இப்படி அரசியல் சாயம் நம் நிர்வாகிககளிடம் இருந்ததால் தான் தங்கள் கட்சி நடத்திய மது ஒழிப்பு கூட்டத்திற்கு நம்மூர் ஹஜ்ரத்தை அழைத்து சென்றுள்ளனர். அதுபோல் விழாவுக்கு வரும் அரசியல்வாதிகளும் என்ன பேசுவதென்று தெரியாமல் தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை புகழ் பாடுகின்றனர். மதரசா பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களை புகழ் பாடுவதுதான் அதிகம். எனவே இது மாதிரியான செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நிர்வாகிகள் தேர்தலில் இவர்களை புறக்கணித்து சேவை மனப்பான்மையும், மார்க்கம் அறிந்தவர்களையும் தேர்தடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மூருக்கு சிறப்பானதோர் நிர்வாகம் அமைய உதவி புரிவானாக. ஆமீன்.

Sunday, April 15, 2012

இறப்பு செய்தி(15/04/2012)


மஷாயிக் தெரு அஜீஸ், சையது, மூஸா மற்றும் ஜஹபர் அலி அவர்களின் தகப்பனார் ஹிதாயத்துல்லா அவர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் இறந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்

Thursday, April 12, 2012

கண்டவர்களும் பதவிக்கு வந்து விடுவார்களாம்!

நமதூரில் நிர்வாகிகளை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வக்பு போர்ட் முடிவு செய்து ஆரம்ப கட்ட பணிகளை முடிக்கிவிட்ட நிலையில், இத்தேர்தலை விரும்பாதவர்கள் 30-03-2012 அன்று பள்ளியில் பழைய நிர்வாகியை ஒருவர் விமர்சித்ததால் தாக்கப்பட்டார். இனியும் மக்களை மிரட்டி பார்க்கலாம் என்று எண்ணாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதற்கு ஒத்துழைப்பதுதான் இவர்களுக்கு நல்லது. இனியும் இன்ஷா அல்லாஹ் இவர்களின் மிரட்டலுக்கு பயப்படும் நிலையில் மக்கள் இல்லை. முன்பு நீடூரில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் கண்ணியமிக்கவர்களாகவும் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்போழுது உள்ள நிர்வாகிகள் அப்படியா? அவர்களின் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மூன்று அடிதடி சம்பந்தபட்டவை. எனவேதான் இவர்கள் கோரும் பாரம்பரிய(!) கோரஸ் முறைக்கு எதிர்ப்பலை உள்ளது, அதை நடத்தினால் அடிதடிக்கு பெயர் போனவர்களை நிர்வாகிகளாக கொண்டு வந்துவிடுவார்கள்.
இந்த அதிமேதாவி நிர்வாகிகள் சொல்லும் அடுத்த சப்பை காரணம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் கண்டவர்களும் பதவிக்கு வந்து விடுவார்களாம்!.என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? மக்கள் அனைவரும் முட்டாள்கள், கண்டவர்களுக்கும் ஓட்டு போட்டு பதவிக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார்களா? பதவிக்கு நிற்பவர்கள் என்ன வேறு ஊரிலிருந்து வந்து இங்கு நிற்க போகிறார்களா? நமது ஜமாத்திலிருந்து தானே போட்டியிட போகிறார்கள்? மக்களுக்கு எவன் நல்லவன் என்று தெரியாத கூமுட்டை என்று நினைத்து கொண்டிருக்கிறிர்களா? 
நான்கு நஜாத்துக்காரர்கள் தான் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்கின்றனர். என்னப்பா இது? ஜமாத் தேர்தலில் கண்டிப்பாக நஜாத்காரர்கள் எக்காரணம் கொண்டும் போட்டியிட போவதில்லை இப்படியிருக்க அவர்களை கண்டு பயமேன்? ஏதோ நான்கு பேர் செய்யும் வேலை என்றால் இவ்வளவு ஆதரவு இருக்காது, பெருபான்மை மக்கள் ரகசிய வாக்கெடுப்பை கோருகிறார்கள். வாக்பு போர்டும் அதற்காக தயாரகிவிட்ட நிலையில் குட்டையை குழப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.
ஒரு ஊர் இமாமை உங்கள் போக்குக்கு வலைப்பது கொடுமையிலும் கொடுமை. இஸ்மாயில் ஹஜ்ரத்திற்கு உள்ள நல்ல பெயரை உங்கள் மூலம் கலங்கபடுத்தாதீர்கள். ரகசிய வாக்கெடுப்புக்கான வேலை மும்முரமாக நடைபெறும் வேலையில் ஜும்மா உரையில் அதை எதிர்த்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியே!
நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெயித்தவர்களிடம் பதவியை கொடுக்காமலும், அதை கேட்டால் மிரட்டுவதுமாக இருந்தால் இந்த கொடுமையை யாரிடம் போய் முறையிடுவது? இப்பொழுது அதற்கான தீர்வாக அமையவிருக்கும் ரகசிய வாக்கெடுப்பு வேலையை சீர்குலைக்க முயற்சிக்கும் விஷமிகளுக்கு மக்கள் அடிபணிந்து விடாமல் நல்லதோர் நிர்வாகம் அமைய ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு நடக்கும் வேலைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்திட வேண்டும். நல்லதோர் இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி புரிந்திடுவானாக்! ஆமீன்.

நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம்(13-04-2012)

நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் மாதந்திர கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை(13-04-2012) நிஜார் அவர்களின் ரூமில் மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெறும். அக்கூட்டத்தில் நீடூர் - நெய்வாசல் அஸோஸியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனைகள் உறுப்பினர்கள் அனைவரிடமிருந்து பெறப்படுகிறது. எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு உங்கள் மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, April 1, 2012

ரவுடிகளாக மாறிய நிர்வாகிகள்


நீடூர் நெய்வாசலில் இன்று நடந்த ஜும்மா தொழுகையின்  இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் பள்ளிவாசலில் தேர்தல் நடத்துவது (வக்பு) தவறான வழி என்று பேசி உள்ளார். தொழுகை முடிந்தவுடன் தற்போது டிரஸ்டியாக இருக்கும் அப்துல் ஹமீது ஹஜ்ரத்  இஸ்மாயில் கூறியபடி நமதூரில் தேர்தல் வேண்டாம் ஒற்றுமையாக இருப்போம் என்று கூற மாலிக் என்ற சகோதரர் எழுந்து நின்று தேவை இல்லாமல் என்னை சிறையில் வைத்து இருந்தீர்களே நீங்கள் தானே காரணம் என்று கூற நாம் ஏன் மாலிக் அப்படி கூறினர் என்று கேட்க பாமக விற்கு பள்ளிவாசல் கடையில் இரண்டு கடைகள் வாடகை எடுத்து 15 மாதங்கள் வாடகை பாக்கியாம் இதை தட்டிகேட்ட நபரை தட்டினார்களாம் அந்த வழக்கில் மாலிக் கைதாகி இருந்தாராம் இவருக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமே கிடையாதாம் உடனடியாக இவர்கள் மாலிக்கை சமாதான படுத்தி அனுப்பி விடுகின்றனர் பின்னர் 15 வருடம் முத்தவல்லி நாற்காலியை இறுக்கமாக பிடித்து கொண்ட சகோதரர் ஹலீல் ரஹ்மான பள்ளிவாசலுக்கு வெளியில் 15 வருடமாக நான்தாண்டா உழைத்தேன் என்றும் எங்களை யாரும் அசைக்க முடியாது என்றும் கேவலமாக பேசியுள்ளார் .

தொழுகை முடித்து வெளியில் வந்த சகோதரர் பாருக் என்ற சகோதரர் நீங்கள் நடந்துகொண்ட விஷயங்களால் தான் தேர்தல் வருகிறது என்று கூற இதை வாய்ப்பாக பயன்படுத்தி நான்கு நபர்கள் ஹலீல் ரஹ்மான் , அப்துல் ஹமீது , சதகதுல்லா , ஹக் , பாரி ஆகிய நபர்கள் பாருக்கை கடுமையாக தாக்கினார்களாம் கடுமையாக தாக்க பட்ட பாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் காவல்துறை எங்கு நம்மீது நடவடிக்கை எடுதுவிடுமோ என்ற பயத்தில் உடனடியாக ஹலீல் ரஹ்மான் பாருக் செருப்பால் அடித்து விட்டதாக காவல்துறையில் புகார் செய்து உள்ளார் மருத்துவமனையில் இருந்து பாருக் தான் எதனால் தாக்கப்பட்டோம் என்று காவல்துறையில் என் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக தற்கால நிர்வாகத்தில் மனு கொடுத்ததாகவும் அதில் தற்கால நிர்வாகிகள் தங்களுக்கு ஆதரவாக எடுத்த நிர்வாகதிருக்கு நீ கையெழுத்து போட மறுத்தால் உனது பிரச்னையை கேட்க மாட்டோம் என்று கூறி விட்டனர் இதை பாருக் எல்லோரிடமும் நிர்வாகம் தேர்ந்து எடுத்ததுக்கு 50 நபர்கள் கூட வரவில்லை ஆனால் தீர்மான புத்தகத்தில் 250 பேர் கையொப்பம் இட்டதாக பொய் கையெழுத்து போட்டு உள்ளர்னர் என்று சொன்னதாக இவர் மேல் கடும் கோபத்தில் இருந்து இருகின்றனர் இதை பயன் படுத்தி பாருக்கை கடுமையாக தாக்கி இருகின்றனர் வாக்குமூலம் கொடுத்த பாருக்கு மருத்துவமனையில் ஆனால் இதில் இருந்து நமக்கு தெரியவரும்

1. ஒற்றுமை வேண்டும் தேர்தல் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் தற்காலிக நிர்வாகம் 5 நபர்களை தேர்ந்து எடுத்தது ஏன் குழப்பத்தை ஏற்படுத்துவது தானே இவர்கள் எண்ணம் ?

 2.ஐந்து நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு பதவி ஆசை காட்டி தனக்கு ஆதரவாக மாற்றியது எதற்காக தங்களுக்கு ஆட்கள் பலம் சேர்கவா நாம் கூட தேர்தல் வேண்டாம் ஒற்றுமையாக இருங்கள் என்று       முன்னர் தெளிவாக எழுதி இருந்தோம் ஆனால் அவர்கள் எண்ணம் அப்படி இல்லை 15 வருடமாக தொடர்ந்து ஒருவர் பொறுப்பில் இருந்தால் அவர் எப்படி அந்த பதவியை விட மனம் வரும் குறிப்பாக பள்ளிவாசலில் அடிப்பது நீடுரில் தொடர்கதையாகி விட்ட நிகழ்ச்சியாகி விட்டது எப்பொழுதுதான் திருந்த போகிறார்களோ பதவி ஆசை பிடித்தவர்கள் போகிற போக்கை பார்த்தால் கண்டிப்பாக தேர்தல் நீடூர் நெயவசலில் நடக்கும் என்பதை உறுதி படுத்தியது இந்த நிகழ்வுகள்

3.இதில் காவல்துறை DSP இஸ்லாமியர் என்பதால் எப்படி நடந்து கொள்ள போகிறார் என்று தெரியவில்லை காரணம் நேர்மையான DSP என்று பாராட்டுகளை பெற்ற இவர் இந்த விஷயத்தில் எப்படியும் கோட்டை விடுவார் என்று பத்திரிகையாளர் நம்மிடம் பேசியது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது .பொருத்து இருங்கள் தொடர்வோம்....

நன்றி: kiliyanur.net