அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, April 23, 2013

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் உலக நிகழ்வுகள்


சமீபத்தில் யூத விஞ்ஞானி ஒருவர் இஸ்லாத்தை தழுவினார் ஏன்?

கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர் இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்கு செய்யப்பட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே- அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் (2:228) கூறுகின்றது. இந்த வசனத்தை படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார் ஏன்? அப்படி என்ன அதில் அவர் கண்டுவிட்டார்? தொடர்ந்து படியுங்கள்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டிஎன்எ ரேகைப் பதிவு (DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டிஎன்எ ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்கு பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது. இது தொடர்பாக எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மத் சயீத் கூறுகிறார் - அறிவியல் சான்றுகளை அடிப்படையாக கொண்டே ராபர்ட் இஸ்லாத்தை தழுவினார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய ரேகையை பெண்ணிடத்தில் விட்டுச் செல்கிறான், அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுப்பிடித்தார். அதற்கேற்ப அமெரிக்காவில் ஆப்பிரிக்கா முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவான்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவ பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி தம்முடைய மூன்று பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே தமக்கு பிறந்தவர் என்ற உண்மையையும் அவரைத் தாக்கியது.

ஆக இதிலிருந்து மூன்று மாத “இத்தா” ஏன் என்பதற்க்கு காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டிஎன்எ ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டாள் டிஎன்எ பரிசோதனையில் குழப்பம் வராது. இல்லையேல் மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டிஎன்எ வும் முந்தைய கணவனின் டிஎன்எ வும் ஒத்துப்போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

சத்திய மார்க்கம் இஸ்லாம் உலக விஷயங்கள் அனைத்திற்க்கும் ஒரு நல்ல தீர்வு.

நன்றி: tamilislammedia.com


No comments:

Post a Comment