அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, July 25, 2012

நோன்பு கால சமையல்-5


ஜிகிர்தண்டா (இதயத்தை குளிர வைக்கும் பானம்)

















தேவையான பொருட்கள்:
  • பால் – ஒரு லிட்டர்
  • சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
  • கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்
  • நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1
  • பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
ஒரு லிட்டர் பாலைசர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில்மெல்லிய தீயில் கொதிக்க விட்டுரோஸ் கலர் சேர்க்கவும்.
பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6மணி நேரங்கள் வைக்கவும்.
கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம்வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனாகிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டிபிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிரவைக்கவும்.
குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில்பாதியளவு ஊற்றவும்.
இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ்துண்டுகளைப் போடவும்.
பிறகு ரோஸ் ஸிரப்நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல்பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.
வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்திமனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.

:நன்றி:senthilvayal.wordpress.com

No comments:

Post a Comment