அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, August 15, 2012

இரக்கம் கொள்ளுதல்


அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோமேற்கிலோதிருப்பிக்கொள்வதில் இல்லைஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின்மீதும்இறுதி(த் தீர்ப்புநாளின் மீதும்மலக்குகளின் மீதும்வேதத்தின் மீதும்,நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்பொருளை இறைவன் மேலுள்ளநேசத்தின் காரணமாகபந்துக்களுக்கும்அநாதைகளுக்கும்,மிஸ்கீன்(ஏழை)களுக்கும்வழிப் போக்கர்களுக்கும்யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள்கடனாளிகள்போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்துவருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம்வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமைஇழப்பு போன்ற)துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்கஷ்டத்திலும்யுத்தசமயத்திலும்உறுதியுடனும்பொறுமையுடனும் இருப்போரும் தான்நன்னெறியாளர்கள்இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல் குர்ஆன் 2:177)



கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினைதொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தைவிட மேலானவையாகும்தவிரஅல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்தேவையும் இல்லாதவன் மிக்கபொறுமையாளன்(அல் குர்ஆன் 2:263)

நபி (ஸல்அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னதுகிடையாது என ஜாபில் (ரலிஅறிவிக்கிறார்கள்(நூல்புஹாரிமுஸ்லிம்)

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர்அதன் ஒரு பகுதி மற்றொருபகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்குதங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபுமூஸா அஷ்அரி (ரலி), நூல்புஹாரிமுஸ்லிம்மிஷ்காத்)

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதேஇறைவன் அவன் மீது கருணைபுரிந்துஉன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்(நூல்திர்மிதி).

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர்இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனைபுரிவதைப் பற்றிஅஞ்சுங்கள்ஏனெனில்அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையேஎந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்அவர்கள் முஆத் (ரலிஅவர்களை யமன்நாட்டுக்கு (ஆளுநராகஅனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்புஹாரி)

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும்முதுகில் சூடுஇடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள்அந்த நாய் தாகம்அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்ததுஉடனேஅவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டிகிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து,அந்த நாய்க்கு புகட்டினாள்இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான்நூல்:புஹாரி,முஸ்லிம்

என் இறைவாஎனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலேகேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்நீ என்னை மன்னித்துஎனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. (திருக்குர்ஆன் 1:47)

No comments:

Post a Comment