அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, September 17, 2011

நெய்வாசல் நிர்வாகிகள் தேர்தல் எப்பொழுது?


நீடூர் நெய்வாசல் ஜாமியாமஸ்ஜித் நிர்வாகிகள் தேர்தல் 2007ம் வருடம் நடைப்பெற்றது. இதில் முத்தவல்லியாக 107 ஓட்டு வித்தியாசத்தில் ஜின்னாத்தெரு A.முஹம்மதுஅலி அவர்கள் வெற்றிபெற்றார்.தோல்வியை தழுவிய ரயிலடித்தெரு ஹாலித் அவர்களையே துணை முத்தவல்லியாக இருக்குமாறு சிலர் சொல்ல, அதை மறுத்தனர் ஊர்மக்கள்.
பிறகு இருதரப்பு நிலையினை அறிந்த வக்ஃப் அதிகாரிகள் எந்த பதில்களும் சொல்லாமல் சென்றதால் பழைய முத்தவல்லி ஹலில்ரஹ்மான் அவர்களே இன்றுவரை பதவி வகிப்பது அறித்த விஷயம். இந்நிலையில் அலி அவர்கள் நீதிமன்றத்தில் தேர்தலில் ஜெயித்த தமக்கு முத்தவல்லி பதவியை வழங்கக்கோரி ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார்.,அதன் அடிப்படையில் நேற்று. நீதீமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது 2007ம் வருடம் நடைப்பெற்றதாக சொல்லப்படும் ஊர்தலைவர்கான தேர்தல் நடந்ததாக எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி மீண்டும் வக்ஃப் போர்ட்டை அணுகுமாறு. தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்கை தள்ளுப்படி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கேஸ் இல்லை எனும் பச்சத்தில் கேஸ் வாபஸ் பெற்றால் உடனே பதவி விலகுவதாக அறிவித்த நிர்வாக தலைமை கோர்ட் அறிவிப்பு வந்த நிலையில் என்ன முடிவு செய்ய போகிறது என்று அறிய ஊர்மக்கள் ஆர்வமாக உள்ளனர். நமது நீடுரில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றால், புதிய நிவாகம் கொண்டு வர ஜமாத்தார்கள் முயற்சி செய்யவண்டும். இரண்டு மாதம் முன் பழைய நிர்வாகிகள் வட்டாச்சியர் முன் எழுத்து மூலம் முன்று மாதத்திற்குள் நாட்டாண்மை தேர்தல் நடத்துவதாக எழுதி கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்



 -நன்றி: நீடுர்நெட்

No comments:

Post a Comment